Tuesday, December 3, 2024

தொன்று நிகழ்ந்த

 #கனவிலே_எழுதி_மடித்த_கவிதை


பாடல் வகை:

1) அம்மே நாராயணா தேவீ நாராயணா

2) சோட்டானிக்கரயம்மே ஜகதம்பிகே

3) ஹரஹர ஶிவனே அருணாசலனே


பாடல்: துணையென நான் உணர்ந்தேன்

ராகம்: ஶுபபந்துவராளி


ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம்


1)

தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்தவன்

அன்றும் இன்றும் என்றுமி ருப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


2)

நின்றே அறியா நடனம் புரிபவன்

நின்றுமோர் பதியில் அகிலம் ஆள்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


3)

திங்கள் கங்கை சடையி லணிந்தவன்

அங்கம் எங்கும் சாம்பல ணிந்தவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


4)

சங்கரிக்கு இடபாகம ளித்தவன்

சங்கில் விஷத்தை அடக்கி யழித்தவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


5)

நுதல்விழியாலே தீமைய ழிப்பவன்

அருள்விழியாலே வரங்கள ளிப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


6)

அரவங்க ளணியாய் உடலில ணிந்தவன்

நறவினும் இனிய மொழிக ளுரைப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


7)

திருவிளையாடல்கள் புரிந்த ருள்பவன்

விதிவிளை யாடலை திருத்தி யருள்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


8)

அடவியிலாடி உறவுகள் தருபவன்

சுடலையிலாடி பிறவிய றுப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


9)

பிறவிக் கடலை நீந்தவ ருள்பவன்

உறவுக் கடலின் பந்தம றுப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


10)

சென்று பணிந்திடும் பக்தரை யெல்லாம்

கன்றைப் பசுவென காத்து அருள்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)

No comments:

Post a Comment