Tuesday, December 3, 2024

தொன்று நிகழ்ந்த

 #கனவிலே_எழுதி_மடித்த_கவிதை


பாடல் வகை:

1) அம்மே நாராயணா தேவீ நாராயணா

2) சோட்டானிக்கரயம்மே ஜகதம்பிகே

3) ஹரஹர ஶிவனே அருணாசலனே


பாடல்: துணையென நான் உணர்ந்தேன்

ராகம்: ஶுபபந்துவராளி


ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம்


1)

தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்தவன்

அன்றும் இன்றும் என்றுமி ருப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


2)

நின்றே அறியா நடனம் புரிபவன்

நின்றுமோர் பதியில் அகிலம் ஆள்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


3)

திங்கள் கங்கை சடையி லணிந்தவன்

அங்கம் எங்கும் சாம்பல ணிந்தவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


4)

சங்கரிக்கு இடபாகம ளித்தவன்

சங்கில் விஷத்தை அடக்கி யழித்தவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


5)

நுதல்விழியாலே தீமைய ழிப்பவன்

அருள்விழியாலே வரங்கள ளிப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


6)

அரவங்க ளணியாய் உடலில ணிந்தவன்

நறவினும் இனிய மொழிக ளுரைப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


7)

திருவிளையாடல்கள் புரிந்த ருள்பவன்

விதிவிளை யாடலை திருத்தி யருள்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


8)

அடவியிலாடி உறவுகள் தருபவன்

சுடலையிலாடி பிறவிய றுப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


9)

பிறவிக் கடலை நீந்தவ ருள்பவன்

உறவுக் கடலின் பந்தம றுப்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)


10)

சென்று பணிந்திடும் பக்தரை யெல்லாம்

கன்றைப் பசுவென காத்து அருள்பவன்

துணையென நான் உணர்ந்தேன்

அவனே எந்தன்

துணையென நான் உணர்ந்தேன் (ஓம் நம: ஶிவாய ஓம்)

Tuesday, November 5, 2024

உளதென்றால்

 உளதென்றா லுளதாய் 

இலதென்றா லிலதாய் 

முதலென்றால் முதலாய் 

முடிவென்றால் முடிவாய் 

உருவென்றா லுருவாய் 

அருவென்றா லருவாய் 

குருவென்றால் குருவாய் 

வருகென்றால் வருவாய்

எண்ணிய எண்ணியாங்குறு உருவே 

என்றுமிங்கெமக்கு உறவே 

என்றுமெம் கவிக்கு கருவே 

நின்னடியே எமக்குத் திருவே 

பொன்னம்பலத் தாடும் வடிவே 

நின்கருணைக் கிலையொரு முடிவே 


🙏திருச்சிற்றம்பலம்🙏